பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் தனது இரண்டு வருட எம்.பி.க்கான சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு பணம் சேகரிக்கும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போது எம்.பி.யாகவும் இருக்கும் கவுதம் கம்பிர் ஏற்கனவே தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்துார்.
இந்நிலையில் தனது இரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மக்கள் தங்களுடைய நாடு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்பதுதான் உண்மையான கேள்வி. நான் என்னுடைய இரண்டு வருடத்திற்கான எம்.பி. சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் முன்வர வேண்டும்!’’ எனத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar