Press "Enter" to skip to content

ஐபிஎல் பருவம் தள்ளிப்போனால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்: நவ்தீப் சைனி சொல்கிறார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி, ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால் மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகமிக முக்கியமானது நாட்கள் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே ஏப்ரல் 14-ந்தேதியுடன் முடிவடையும் 21 நாட்கள் ஊடரங்கு உத்தவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதோ? அல்லது ரத்து செய்வதோ? குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவி்ல்லை.

ஏராளமான இளம் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்துள்ளன. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தன. கொரோனா வைரஸ் இந்த இளைஞர்களின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளது.

இந்நிலையில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி ஐபிஎல் தொடர் மீண்டும் தள்ளிப்போனால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் நவ்தீப் சைனி இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று. ஆகவே, இந்தத் தொடர் நடைபெறாவிடில் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் தற்போது சந்தித்து வரும் சூழ்நிலையில் உடல்நலம் மிக முக்கியமானது.

கிரிக்கெட் வீரர்கள் என்பதற்கு முன்னர் நாம் எல்லோரும் மனிதர்கள். மனிதர்களை காப்பாற்றினால்தான், அதன்பின் கிரிக்கெட்டை பற்றி யோசிக்க முடியும். ஆகவே, தற்போது கிரிக்கெட் நடைபெறாவிட்டாலும், அது மிகப்பெரியதாக தெரியாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »