Press "Enter" to skip to content

எனது மதிப்பீட்டின்படி இன்னும் ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது: சோயிப் அக்தர்

கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற இன்னும் ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் என் மதிப்பீட்டின்படி கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்க ஒரு வருடம் ஆகும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியடைந்தாலும், இந்தியா மிகவும் சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால், கடந்த முறை போன்று மீண்டும் சிறந்த அணி என்பதை நிரூபிக்க வேண்டும்.

எனினும், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறும் என நான் பார்க்கவில்லை. என்னுடைய மதிப்பீட்டின்படி அடுத்த ஓராண்டுக்கு எந்தவித கிரிக்கெட்டும் நடைபெறும். டி20 உலக கோப்பையில் நடைபெறாது.

தற்போது நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் கூட்டமாக கூடும் அனைத்து தொழில் துறைகளும் தடைபட்டுள்ளது. ’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »