Press "Enter" to skip to content

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தலைச்சிறந்தவர் டோனி தான் – ஹஸ்சி புகழாரம்

என்னை பொறுத்தவரை ஆட்டத்தை வெற்றிகரமான முடிப்பதில் கிரிக்கெட் உலகம் உருவாக்கிய தலைச்சிறந்த வீரர் டோனி தான் என ஹஸ்சி புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பை:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். சஞ்சய் மஞ்சரேக்கருடன் கலந்துரையாடலில் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள ஹஸ்சி கூறியதாவது:

‘என்னை பொறுத்தவரை ஆட்டத்தை வெற்றிகரமான முடிப்பதில் (பினிஷர்) கிரிக்கெட் உலகம் உருவாக்கிய தலைச்சிறந்த வீரர் டோனி தான். எனது கருத்து கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தலாம். கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சிறந்த பினிஷர்கள் இருந்தனர். ஆனால் நெருக்கடியான கட்டத்தில் டோனி அளவுக்கு யாரும் அமைதியாக இருந்ததில்லை. நம்ப முடியாத சக்தி அவரிடம் இருக்கிறது. பந்தை எப்போது எல்லைக்கோட்டை தாண்டி விரட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அதை அவர் சரியாக செய்வார். அவருக்கு அந்த அளவுக்கு தன்னம்பிக்கை உண்டு. அத்தகைய தன்னம்பிக்கை என்னிடம் இருந்ததில்லை.

இவ்வாறு ஹஸ்சி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »