ஐபிஎல் லீக்கில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் உள்ள சஞ்சு சாம்சன், இவருடைய பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மிகவும் திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களில் இவரும் ஒருவர். தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த போதிலும் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்வதுதான் மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையிலா் ‘‘சுனில் நரைன் பந்தை வீச்சு எதிர்கொள்வது மிகவும் கடினம். அவரது பந்தை நான் சிறப்பாக எதிர்கொண்டாலும் சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கினார். அப்போது ஒரு போட்டியில் அரைசதம் அடித்து மிகக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் இந்திய அணியில் இடம் கிடைத்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
2015-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். ஆனால் தொடர்ந்து அவரால் இடம் பிடிக்க இயலாமல் போனது.
Related Tags :
Source: Maalaimalar