ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவ் வாட்மோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது பரோடா ரஞ்சி கோப்பை அணி.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர். கடந்த மூன்று ரஞ்சி கோப்பை சீசனில் இவர் கேரள அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் பரோடா அணி வாட்மோரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அனைத்து வேலைகளையும் பரோடா கிரிக்கெட் அணி செய்து முடித்துள்ளது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியாவில் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், வாட்மோர் ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்திடவில்லை.
66 வயதாகும் வாட்மோர் தலைமையில்தான் 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை கைப்பற்றியது. மேலும், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar