துபாயை மையமாக கொண்டு செயல்படும் பயிற்சி அகாடமியான கிரிக்கிங்டம் இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
துபாயை மையமாக வைத்து செயல்படும் பயிற்சி அகாடமி கிரிக்கிங்டம். மாணவர்கள், வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள், மாணவர்கள், வீரர்கள் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
5 வயது முதல் 8 வயது, 8 வயது முதல் 13 வயது வரை, 13 வயதிற்கு மேல் கிளப் மற்றும் முதன்மை லெவலுக்கான கிரிக்கெட்டர்கள் என வகைப்படுத்தி பயிற்சி அளிக்கிறது.
Related Tags :
Source: Maalaimalar