Press "Enter" to skip to content

இரண்டு பேரை மட்டுமே சார்ந்திருப்பதால் இந்திய அணியில் தன்னம்பிக்கை குறைவாக உள்ளது: ஹர்பஜன் சிங்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியை தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். 95 சதவீதம் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டால் ஐந்து சதவீதம் போட்டியை வெற்றிகரமாக கொண்டும் செல்லும் தன்னம்பிக்கை மற்ற வீரர்களிடம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்தியா விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு பேரை சார்ந்தே உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அதிகப்படியான நம்பிக்கையில் இல்லை. ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஆட்டமிழந்து விட்டால் 70 சதவீத போட்டி நம் கையில் இருந்து நழுவி விடுகிறது. இதற்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »