வில்வித்தைக்கான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் யுனிட்டாக மாற்றியுள்ளார் இந்திய வில்வித்தை சங்க பொது செயலாளர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளரகள் பயன்படுத்தும் கையுறைகள், முகக்கவசங்கள், சிறப்பு ஆடைகளுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது.
இந்தியா மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதில் தரமற்றவைகளையும் சேர்த்து அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள சில தொழிற்சாலைகள் தங்களது யுனிட்டுகளை மாற்றி பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்திய வில்வித்தை சங்கத்தின் பொது செயலாளராக இருப்பவர் பிரமோத் சந்துர். அவர் மகாராஷ்டிராவின் அமராவதியில் வில்வித்தைக்கான வில், அம்பு உள்ளிபட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.
தற்போதைய நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் யுனிட்டாக மாற்றினார். இதன்மூலம் கையுறைகைள், முகக்கவசங்கள், பாதுகாப்பு ஆடைகள் தயாரிக்க முடிவு செய்தார். 30 ஊழியர்களை கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து அவரது நண்பர்களின் மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். தினமும் ஆயிரம் பாதுகாப்பு ஆடைகள் தயாரிப்பதாக பிரமோத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar