கர்நாடக அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜே. அருண்குமார் அமெரிக்க கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜே. அருண்குமார். கர்நாடக அணிக்காக 109 முதல் தர போட்டிகளில் விளையாடி 7208 ரன்கள் அடித்துள்ளார். கர்நாடக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர் என பெயர்பெற்றவர்.
இவரை அமெரிக்கா கிரிக்கெட் சங்கம் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் சிஇஓ ஹிக்கின்ஸ் கூறுகையில் ‘‘ஜே. அருண்குமார் அமெரிக்காவுக்கு வந்து எங்களது ஸ்டாஃப், தேர்வாளர்கள் மற்றும் வீரர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்’’ என்றார்.
2013-14 முதல் 2014-15 வரை கர்நாடக அணி ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, இரானி கோப்பைகளை தொடர்ந்து கைப்பற்ற காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar