Press "Enter" to skip to content

சிக்ஸ் அடிக்கும் பந்தை பேட்ஸ்மேனே எடுத்து வர வேண்டும்: சாஹல் சொல்கிறார்

கொரோனா வைரஸ் காரணமாக பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்க தடைவிதிக்க ஐசிசி யோசனை செய்து வரும் நிலையில் சாஹல் இப்படி ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த விளையாட்டுகளையும் புரட்டி போட்டுள்ளது என்றால் மிகையாகாது. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது என்ற நிலை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகளை நடத்த ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் அழிக்க குறைந்தது ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. அதற்குமுன் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும் வீரர்கள் எச்சில் துப்புவது, கட்டித் தழுவுதல் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட்டை பொறுத்த வரைக்கும் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக பால் டேம்பரிங்கை சட்டப்பூர்வமாக்க ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் நகைச்சுவை உணர்வு கொண்டவர். இவரிடமும் ஐசிசி முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடித்தால் அந்த பந்துகளை அவர்களே எடுத்து வரவேண்டும் என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘ஐசிசி அவ்வாறு முடிவு செய்தால் கையில் இருந்து ரிலீஸ் செய்வதிலும், பந்தை ஸ்விங் செய்வதிலும் பாதிப்பு ஏற்படும். இறுதியில் இந்த முடிவு பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகிவிடும்.

அதேபோல் சிக்ஸ் அடித்தால் அந்த பந்தை பேட்ஸ்மேன்களே எடுத்துவர வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »