Press "Enter" to skip to content

கால்பந்து: லீக்-1 சாம்பியனாகிறது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்

பிரான்சில் கால்பந்து போட்டிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது முதல் இடத்தில் இருக்கும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் லீக்-1 சாம்பியனாகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி போன்ற நாடுகள் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் நடத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் ஏற்கனவே பெல்ஜியம் கால்பந்து லீக் தொடரை ரத்து செய்து விட்டது. பிரான்ஸ் பிரதமர் செப்டம்பர் மாதம் வரை கால்பந்து போட்டிகள் நடைபெறாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் பிரான்ஸ் நாட்டின் முதன்மை கால்பந்து லீக்கான லீக்-1 இனிமேல் நடைபெற வாய்ப்பில்லை. தற்போது வரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் டி மார்செய்ல் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் 12 புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை சாம்பியனாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கடைசி 8 வருடங்களில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருக்கிறது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »