வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல், கடைசி ஐபிஎல் போட்டி வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான 32 வயதான ஆந்த்ரே ரஸ்செல் ஆன்-லைன் உரையாடலில் கூறியதாவது:-
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும்போது நான் உண்மையிலேயே சிலிர்த்து போகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கரீபியன் பிரிமியர் லீக் போட்டியின் போதும் இதே போன்று உத்வேகம் ஏற்படுகிறது.
ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதுவும் கொல்கத்தா ஈடன் கார்டனில் ஆடுவதற்கு நிகர் எதுவும் கிடையாது. கொல்கத்தா அணிக்காக 6 சீசனில் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவித்து ஆடியிருக்கிறேன்.
எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை கொல்கத்தா அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். 2 ஆட்டங்களில் சோபிக்காமல், அடுத்து 3-வது ஆட்டத்தில் இறங்கும் போதும் கூட ரசிகர்களின் ஆரவாரமும், வரவேற்பும் ஒரே மாதிரியே இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.
இவ்வாறு ரஸல் கூறினார்.
Related Tags :
Source: Maalaimalar