Press "Enter" to skip to content

எம்எஸ் டோனி மட்டையாட்டம்கை பார்த்து திகைத்துப்போனேன்: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

எம்எஸ் டோனி மிகவும் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளதால் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், வர்ணனையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பழைய நினைவுகளை பற்றி பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் எம்எஸ் டோனி குறித்து பேசியுள்ளார்.

அப்போது கிரேக் சேப்பல் கூறுகையில் ‘‘தோனியின் பேட்டிங்கை முதல்முறை கண்டபோதே திகைத்துப்போனேன். அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணியிக்கு ஒரு திறமையான பேட்ஸ்மேன் கிடைத்து விட்டதாக நினைத்தேன்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி 183 ரன்களை குவித்தது நினைவிருக்கிறது. அது ஒரு மிகவும் அதிரடியான பேட்டிங். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அவர் பந்துகளை சரியான திசைகள் பார்த்தெல்லாம் அடிக்கவில்லை. நான் கண்டவரை இந்திய அணியில் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் தோனிதான்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »