Press "Enter" to skip to content

இலங்கையை அடுத்து ஜிம்பாப்வே தொடரையும் ரத்து செய்தது பிசிசிஐ

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி .இந்தியாவில் விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் மாதத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி எந்தவித போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் உள்ளது.

இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததால் இந்தியாவுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை அணி விரும்பியது. இந்தியாவும் இலங்கை வந்து விளையாட சம்மதம் தெரிவித்தது.

ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனாவில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடரை நேற்று ரத்து செய்தது.

ஜிம்பாப்வே அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. தற்போது இந்தத் தொடரையும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

பிசிசிஐ முதன்முறையாக இரண்டு தொடர்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இந்தத் தகவலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »