கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்துள்ள யுவென்டஸ் அணி, உடினிஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ‘சீரி ஏ’ சாம்பியன் இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது.
இத்தாலியில் நடைபெறும் முதன்மை கால்பந்து லீக்கான சீரி ஏ-யில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, டை பாலா விளையாடும் யுவென்டஸ் யுடினிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் மேத்திஜ்ஸ் டி லிக்ட் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் 52-வது நமிடத்தில் யடினிஸ் அணியின் நெஸ்டோரோவ்ஸ்கி கோல் அடித்தார். 90 நிமிட ஆட்ட முடிவில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்து. இன்ஜுரிக்கான நேரத்தில் (90+2) சீகோ போஃபனா கோல் அடிக்க யுடினிஸ் 2-1 என வெற்றி பெற்றது.
Related Tags :
Source: Maalaimalar