Press "Enter" to skip to content

வாய்ப்பாடு 1: அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ கிராண்ட் பிரி ரத்து

பார்முலா 1 கார்பந்தய போட்டியில் அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கிராண்ட் பிரி-க்கள் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஸ்பில்பேர்க்கில் நடந்த முதலாவது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஸ்டிரியா கிராண்ட் பிரி பந்தயமும் ஸ்பில்பேர்க் ஓடுதளத்திலேயே நடைபெற்றது. இதில் ஹாமில்டன் வெற்றி பெற்றார். ஹங்கேரியன் கிராண்ட் பிரி 19-ந்தேதி நடைபெற்றது. இதிலும் ஹாமில்டன்தான் வெற்றி பெற்றார். பிரிட்டிஸ் கிராண்ட் பிரி ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரேசில், கனடா, மெக்சிகோ, அமெரிக்கா கிரண்ட் பிரி பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கிராண்ட் பிரியை நடத்த முன்வந்துள்ள நிலையில், அமெரிக்க கண்ட நாடுகள் மறுத்துள்ளன. வியட்நாம் முதன்முறையாக இந்த பந்தயத்தை நடத்த இருக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »