டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடக்க இருந்த 5-வது சீசன் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இத்தொடர் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஆகஸ்.,31-ந்தேதி வரை எவ்வித விளையாட்டு போட்டிகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி அறிவித்துள்ளார். TNPL தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar