Press "Enter" to skip to content

தெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா?

சச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மும்பை:

கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரும் காதலிப்பதாக தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்தநிலையில் சாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான்கில் பீல்டிங்கின் போது டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்த புகைப்படத்தை தான் சாரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

மேலும் அதில் ஹார்ட்டுகளை (இதயம்) பதிவிட்டுள்ளார். இதனால் சாராவும், சுப்மான்கில்லும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பும் 2 முறை சாராவும், சுப்மான்கில்லும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் தான் தற்போது மீண்டும் புகைப்படத்தை சாரா வெளியிட்டிருப்பது அவர்கள் இருவரும் காதலில் உள்ளனர் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது என்ற கருத்து நிலவி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »