Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி

குயின்டான் டி காக் அதிரடியாக விளையாடி 78 ஓட்டங்கள் விளாச மும்பை இந்தியன்ஸ் 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெடின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் மட்டையாட்டம் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்களே எடுத்தது. பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 149 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 10.3 சுற்றில் 94 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 36 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டத்தில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது மட்டையிலக்குடுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »