Press "Enter" to skip to content

வாழ்வா? சாவா? நிலைக்குத் தள்ளப்பட்ட மூன்று அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

14-ல் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யமுடியும். அதற்கு கீழ் வெற்றி பெற்றால் ரன்ரேட், மற்ற அணிகள் எவ்வாறு விளையாடுகிறது என்பதை பொறுத்து அமையும்.

தற்போதுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 9 போட்டிகளில் விளையாடி முடிந்துள்ளது. இரண்டு அணிகளும் 6-ல் தோல்வியடைந்து 3 வெற்றிகளே பெற்றுள்ளது. இன்னும் ஐந்து போட்டிகள் உள்ளன.

இந்த ஐந்ந்திலும் வெற்றி பெற்றால்தான் உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதே கட்டத்தில் உள்ளது.

டெல்லி அணி 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்து 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »