Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். கடந்த 11ம் தேதி 6 பேரும், 15ம் தேதி 9 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தூரின் துகோகஞ்ச் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அங்கு சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »