Press "Enter" to skip to content

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜியின் தந்தை காலமானார்

நுரையீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை இன்று காலமானார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இவர் இந்திய அணிக்காக ஒரேயொரு ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார்.

இன்று முகமது சிராஜின் தந்தை கோஸ் காலமானார். நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த கோஸ், இன்று காலமானார். முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். மிகவும் சிரமப்பட்டு முகமது சிராஜை இந்திய அணியில் இடம்பெறும் வகையில் கஷ்டப்பட்டு வளர்த்தவர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் முகமது சிராஜ் உடனடியாக இந்தியா புறப்பட முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி முகமது சிராஜியின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »