Press "Enter" to skip to content

ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள யாரும் தயாரக இல்லை: சுனில் கவாஸ்கர்

உடலை தாக்கக்கூடிய ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள எந்த பேட்ஸ்மேனும் தயாராக இல்லை என்று டெஸ்ட கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை தொடரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா இந்த முறையும் சாதிக்குமா?, விராட் கோலி இல்லாத இந்திய அணி எப்படி விளையாடும்?, ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்தத் தொடரில் ஷார்ட் பால் மிகப்பெரிய பேசும்பொருளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் யாரும் ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள தயாராக இல்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை. சிறந்த ஷார்ட் பால் சிறந்த பேட்ஸ்மேனுக்குக் சிக்கலை ஏற்படுத்தும். நான் தயார் என்று எவராலும் சொல்ல முடியாது’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »