Press "Enter" to skip to content

இந்திய அணியில் இவர்தான் எங்களுக்கு மிகப்பெரிய மட்டையிலக்கு: ஜோ ரூட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் சோதனை நாளை தொடங்க இருக்கும் நிலையில், புஜாராதான் எங்களுக்கு மிகப்பெரிய மட்டையிலக்கு என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரில் வெற்றி பெற்றால், ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக களம் இறங்க இருக்கிறது. இதனால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்தான் மட்டையாட்டம்கில் முதுகெலும்பு. இந்திய அணியில் ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ரஹானே உள்ளனர். ஆனால் புஜாராதான் எங்களுக்கு மிகப்பெரிய மட்டையிலக்கு என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘இலங்கையில் இரண்டு சோதனை போட்டிகளை வென்ற பிறகு, நாங்கள் மிகப்பெரிய நம்பிக்கை பெற்றுள்ளோம். புஜாரா தலைசிறந்த வீரர். யார்க்‌ஷைர் அணிக்காக அவருடன் ஒன்றிரண்டு போட்டிகளில் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியானத. அவரிடம் இருந்து மட்டையாட்டம் குறித்து கேட்டறிந்தது உண்மையிலேயே சுவாரஸ்யமானது.

இந்திய அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை பார்த்து இருக்கலாம். இதனால் அவர் எங்களுக்கு மிகப்பெரிய மட்டையிலக்குடாக இருப்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »