Press "Enter" to skip to content

ராவல்பிண்டி சோதனை: பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 145/3

ராவல்பிண்டியில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது சோதனைடில் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் இம்ரான் பட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இம்ரான் பட் 15 ரன்னிலும், அபித் அலி 6 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த அசார் அலி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் பாகிஸ்தான் 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்தது. 4-வது மட்டையிலக்குடுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »