Press "Enter" to skip to content

ஐ.எஸ்.எல். கால்பந்து : கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோப்புப்படம்

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் 21-வது நிமிடத்திலும், அமர்ஜித் சிங் 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெடரிகோ காலேகோ 41-வது மற்றும் 83-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7-வது டிராவாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »