Press "Enter" to skip to content

விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே ஏமாற்றம்: புஜாரா, ரிஷப் பண்ட் அரைசதம்- இந்தியா 225/6

சென்னை சேப்பாக்கம் தேர்வில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, புஜாரா அரைசதம் அடிக்க ரிஷப் பண்ட் போராடி வருகிறார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த இங்கிலாந்து இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 578 ஓட்டங்கள் குவித்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. ஜோ ரூட் 218 ரன்களும், டாம் சிப்லி 87 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ரா தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. ரோகித் சர்மா 6 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி 11 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 73 ரன்னுக்குள் 4 மட்டையிலக்கு இழந்தது.

5-வது மட்டையிலக்குடுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்தியாவின் ஸ்கோர் 192 ரன்னாக இருக்கும்போது புஜாரா 73 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »