சென்னை சேப்பாக்கம் டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து 329 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தாலும், உதிரியாக ஒரு ஓட்டத்தை கூட கொடுக்காமல் சாதனைப் படைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றில் 329 ஓட்டங்கள் சேர்த்தது.
இதில் ஒரு விஷேசம் என்ன வென்றால் 329 ரன்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்தே எடுத்தனர். இங்கிலாந்து வைடு, நோ-பால், பை, லெக் பை என உதிரியாக ஒரு ஓட்டத்தை கூட கொடுக்கவில்லை.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக டர்ன் ஆகிய நிலையிலும் இங்கிலாந்து மட்டையிலக்கு கீப்பர் பென் போக்ஸ் சிறப்பாக கீப்பிங் செய்தார்.
329 ஓட்டங்கள் வரை உதிரியாக ஒரு ஓட்டத்தை கூட கொடுக்காததன் மூலம் 66 வருட கிரிக்கெட் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. இதற்கு முன் 1955-ல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உதிரியாக ஒரு ரன்கூட கொடுக்காமல் பாகிஸ்தானை 328 ஓட்டத்தில் ஆல்-அவுட் ஆக்கியது.
தென்ஆப்பிரிக்கா எதிராக 252, 247 என இரண்டு முறை இங்கிலாந்து உதிரி ஓட்டங்கள் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 236 ஓட்டங்களில் உதிரி ஏதும் கொடுக்கவில்லை.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar