Press "Enter" to skip to content

சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்: புஜாரா

சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு புஜாராவை ஏலம் எடுத்த நிலையில், சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம் பிடிக்கும். ஆனால் எந்த அணியும் இவரை கண்டுகொள்வதில்லை. கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் சுமார் 7 வருடம் கழித்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களம் இறங்க இருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் விளையாட இருப்பது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது சிறப்பு. உண்மையிலேயே சிஎஸ்கே ஜெர்சி அணிந்து விளையாடுவதை எதிர்பார்த்து இருக்கிறேன். மீண்டும் எம்எஸ் டோனியின் தலைமையின் கீழ் விளையாட இருக்கிறேன். நான் இந்திய அணியில் அறிமுகம் ஆகும்போது எம்எஸ் டோனி கேப்டனாக இருந்தார். எம்எஸ் டோனியின் கீழ் விளையாடிய சிறப்பான நினைவலைகள் உள்ளன. அவருடன் மீண்டும் இணைவதை எதிர்பார்த்து இருக்கிறேன்.

ஐபிஎல் பற்றி பேசும்போது, சோதனை போட்டி மனநிலையில் இருந்து மாற வேண்டும். முடிந்த அளவிற்கு எவ்வளது விரைவாக மாற முடியுமோ, அந்த அளவிற்கு மாற வேண்டும். சிறந்த தயார் படுத்துதலுடன் விரைவாக மாறுவது மனதளவை பொறுத்தது என உணர்கிறேன். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என நான் மிகவும் நம்புவேன்’’ என்றார்.

புஜாரா 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 390 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »