Press "Enter" to skip to content

ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் அபார ஆட்டம்- 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 294/7

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அகமதாபாத்:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி சோதனை போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த இங்கிலாந்து அணி, 205 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 மட்டையிலக்கு எடுத்தார்.,

இதையடுத்து முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 24 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. 

இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கோலி ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ஓட்டங்கள், புஜாரா 17 ஓட்டங்கள், ரகானே 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதேசமயம், ரிஷப் பன்ட்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பன்ட் சதம் அடித்தார். அவர் 101 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்தார். 

இதன்மூலம் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 மட்டையிலக்குடுகள் இழந்து 294 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியைவிட இந்தியா 89 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »