Press "Enter" to skip to content

ரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் – சவுரவ் கங்குலி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி சோதனை போட்டியில் இந்தியாவின் மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

அகமதாபாத்:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி சோதனை போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகமாக பென் ஸ்டோக்ஸ் 55 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா சார்பில் தரப்பில் அக்சர் பட்டேல் 4 மட்டையிலக்குடும், அஸ்வின் 3 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு மட்டையிலக்கு இழப்பிற்கு 24 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கேப்டன் கோலி ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ஓட்டங்கள், புஜாரா 17 ஓட்டங்கள், ரகானே 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் சதமடித்து 101 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார் என சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எவ்வளவு சிறந்தவர் அவர்? நம்பமுடியவில்லை… நெருக்கடியான நிலையில் சிறப்புடன் ஆடினார். இது முதல் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்காது…  வரும் ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலான ஆட்டங்களிலும் எல்லா தருணங்களிலும் சிறந்தவராக அவர் இருந்திடுவார்.

இந்த ஆக்ரோஷ முறையில் தொடர்ந்து விளையாடுங்கள். அதனாலேயே அவர் போட்டியை வெற்றி பெற செய்பவராகவும் மற்றும் சிறந்தவராகவும் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »