Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா மட்டையாட்டம் – நடராஜன் சேர்ப்பு

இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

புனே:

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 1 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:-

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், டி.நடராஜன், பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர்குமார், குர்ணால் பாண்ட்யா.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், அடில் ரஷித், மார்க்வுட், ரீஸ் டாப்லி.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »