Press "Enter" to skip to content

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தை தொடர்ந்து இர்பான் பதானும் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப்படம் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக இர்பான் பதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனாலும் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெண்டுல்கர், யூசுப் பதான், தமிழக வீரர் பத்ரிநாத் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணிக்காக ஆடிய இர்பான் பதானும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »