Press "Enter" to skip to content

சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் – தமிழில் பேசி காணொளி வெளியிட்ட ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்ததையொட்டி அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

சென்னை:

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று முன்தினம் முதல் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சியை தொடங்கியது.

யசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், தேஷ் பாண்டே, முகமது அசாருதீன், சச்சின் பேபி உள்பட 11 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேப்டன் விராட் கோலி இன்று சென்னை வருகிறார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.

கேப்டன் ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தாரே உள்ளிட்ட வீரர்களும், பயிற்சியாளர்களும், ஊழியர்களும் வந்தனர்.

சென்னை வந்ததையொட்டி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

‘வணக்கம் சென்னை. மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்‘ என்று அவர் தமிழில் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »