பின் ஆலன் 29 பந்தில் 71 ஓட்டங்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. மழைக்காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் மட்டையாட்டம் செய்த 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 141 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 44 ரன்களும், பின் ஆலகன் 29 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்களும் விளாசினர்.
பின்னர் 10 சுற்றில் 142 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்காளதேசம் 9.3 சுற்றில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டிம் சவுத்தி 3 மட்டையிலக்குடும், டாட் ஆஸ்லே 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். 29 பந்தில் 71 ஓட்டங்கள் விளாசிய பின் ஆலன் ஆட்டநாயகன் விருதையும், கிளென் பிலிப்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar