Press "Enter" to skip to content

முதல் ஒருநாள் போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

சென்சூரியன்:

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 55 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்தது.

வான் டர் டுசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு மில்லர் ஒத்துழைப்பு கொடுத்தார். மில்லர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்றில் 6 மட்டையிலக்குடுக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது. டுசன் 123 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 8 ஓட்டத்தில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 70 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய பாபர் அசாம் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 103 ஓட்டத்தில் வெளியேறினார். மட்டையிலக்கு கீப்பர் மொகமது ரிஸ்வான் 40 ஓட்டத்தில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய ஷதாப் கான் 50வது ஓவரின் முதல் பந்தில் 29 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 5 பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அடுத்த 3 பந்துகளில் தென்ஆப்பிரிக்கா ஓட்டத்தை எதுவும் கொடுக்கவில்லை. இதனால் கடைசி 2 பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பஹீம் அஷ்ரப் வெற்றிக்கு தேவையான 3 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 4 மட்டையிலக்குடும், பெலுகுவாயோ 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

சிறப்பாக ஆடி சதமடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »