Press "Enter" to skip to content

டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படுமா?- ஐசிசி பதில்

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர்- நவம்பரில் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று மிகச்சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. இதனால் கொரோனா தொல்லை முடிந்தது என மக்கள் நினைக்கையில், திடீரென 2-ம் அலையாக மீண்டும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டைவிட தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இன்று கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தக் கொரோனா நெருக்கடிக்குள் ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இன்றி நாளைமறுதினத்தில் இருந்து நடைபெறுகிறது.  இப்படியே சென்றால் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் கேள்விக்குறியாகிவிடும்.

இதுகுறித்து ஐசிசி-யின் இடைக்கால சிஇஓ அல்லார்டைஸ் கூறுகையில் ‘‘டி20 உலகக்கோப்பை நடத்த திட்டமிட்டுள்ள திட்டத்தின்படிதான் உறுதியாகச் செல்வோம். எங்களிடம் மாற்று திட்டம் உள்ளது. அதுகுறித்து இன்னும் யோசிக்கவில்லை. நாங்கள் பிசிசிஐ-யுடன் இணைந்து இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நேரம் வந்தால் மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம்.

கொரோனா காலத்திலும் ஏராளமான நாடுகளில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாங்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு வருகிறோம். உலக சோதனை சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதிலும் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »