Press "Enter" to skip to content

பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய கடும் சவாலாக இருந்தது என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்ச சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. தீபக் ஹூடா, 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. முருகன் அஷ்வின், 9. ரிலே மெரிடித், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப்  சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. பட்லர், 2. மனன் வோரா, 3. பென் ஸ்டோக்ஸ், 4. சஞ்சு சாம்சன், 5. ரியான் பராக், 6. ஷிவம் டுபே, 7. ராகுல் டெவாட்டியா, 8 கிறிஸ் மோரிஸ், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. சேட்டன் சகாரியா, 11. முஷ்டாபிஜூர் ரஹ்மான்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »