Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்த தீபக் ஹூடா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீபக் ஹூடா 20 பந்தில் அரைசதம் விளாசினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

முதலில் மட்டையாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் ரன்குவிப்பிற்கு தீபக் ஹூடாவின் அதிரடியும் முக்கிய காரணம். அவர் 20 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஒருவர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தொடர்ந்து விளையாடிய தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »