Press "Enter" to skip to content

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா? பஞ்சாப்புடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு மும்பையில் நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 189 ஓட்டத்தை இலக்கை டெல்லி எளிதாக எடுத்தது.

இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னை அணி மட்டையாட்டம்கில் சுரேஷ் ரெய்னா, மொய்ன் அலி, சாம் கர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கேப்டன் டோனி, தொடக்க வீரர் டுபிளசிஸ் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். அதே போல் பந்துவீச்சிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3 மட்டையிலக்குடுகளை மட்டுமே கைப்பற்றினர். இதனை சரி செய்ய வேண்டும். மட்டையாட்டம்கில் பலம் பொருந்திய பஞ்சாப்புக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்களை குவிக்க வேண்டியது அவசியமாகும்.

பந்துவீச்சில் தீபக் சாகர், ஜடேஜா, பிராவோ ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் உள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன், தீபக் ஹூடா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

ராஜஸ்தானுக்கு எதிராக பஞ்சாப் 221 ஓட்டங்கள் குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் அதிரடியை காட்ட முயற்சிக்கும். அந்த அணி பந்துவீச்சில் முகமது சமி, ஜய் ரிச்சர்ட்சன் ரிலி மெரிடித், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »