Press "Enter" to skip to content

கொல்கத்தாவிற்கு எதிராக ஆர்சிபி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் ஸ்லோவாக இருப்பதால், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் நேரம் செல்லசெல்ல மிகமிக ஸ்லோவாகிறது. இதனால் மட்டையாட்டம் தேர்வு செய்தேன் என்றார் விராட் கோலி.

ஆர்சிபி அணி:

1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ராஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. ஷபாஸ் அகமது,  8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி:

1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. ஷாகிப் அல் ஹசன், 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »