Press "Enter" to skip to content

மிகப்பெரிய ஸ்கோரை எடுத்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் – சென்னை வீரர்களுக்கு டோனி அறிவுரை

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.

மும்பையில் நேற்று இரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 220 ஓட்டத்தை குவித்தது.

தொடக்க வீரர் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடி 60 பந் தில் 95 ஓட்டத்தை (அவுட் இல்லை) எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். இருவரும் முதல் மட்டையிலக்கு ஜோடியாக 12.2 சுற்றில் 115 ஓட்டத்தை எடுத்தனர்.

வருண் சக்கரவர்த்தி, சுனில் நரின், ஆந்த்ரே ரஸல் தலா ஒரு மட்டையிலக்கு கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 202 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 18 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்மின்ஸ் 34 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 6 சிக்சர்), ஆந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 24 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

சி.எஸ்.கே. வேகப்பந்து வீரர் தீபக் சாஹர் 29 ஓட்டத்தை கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். நிகிடி 3 மட்டையிலக்குடும், சாம் கரண் ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்று இருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப்பை 6 மட்டையிலக்கு வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 45 ஓட்டத்தை வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. சி.எஸ்.கே. பெங்களூர் டெல்லி ஆகிய 3 அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன. நிகர ஓட்டத்தை ரேட் அடிப்படையில் சென்னை அணி முன்னிலை வகிக்கிறது.

வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

எங்களது மட்டையாட்டம் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன்களை நல்ல முறையில் குவித்தோம். அதே நேரத்தில் எதிர் அணியை மதிக்க வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு அணியிலும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதை நான் எனது வீரர்களிடம் தெரிவித்தேன். மிகப்பெரிய ஸ்கோரை பிடித்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றேன்.

எங்களது திட்டம் சிறப்பான முறையில் இருந்தது. 20 ஓவர் முழுமையாக சென்றிருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும்.

கடந்த ஐ.பி.எல். பருவம் போலவே தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

சென்னை அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வருகிற 25-ந் தேதி எதிர்கொள்கிறது.

கொல்கத்தா அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 24-ந் தேதி சந்திக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »