Press "Enter" to skip to content

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ பிரெட்லீ நன்கொடை

நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும் என பிரெட்லீ கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை (இந்திய மதிப்பில் ரூ.29 லட்சம்) பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருபவருமான 44 வயதான பிரெட்லீ ஒரு பிட்காயினை (தற்போதைய வர்த்தக மதிப்பு ரூ.40 லட்சம்) கொரோனா தடுப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை வாங்க வழங்குவதாக நேற்று அறிவித்தார்.

இது குறித்து பிரெட்லீ தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு இந்தியா எப்போதும் 2-வது வீடு போன்றதாகும். நான் விளையாடிய காலத்திலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் சிறப்பானதாகும். கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய இந்த கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »