Press "Enter" to skip to content

தொடர்ந்து ஐந்து வெற்றிகள்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்தது சிஎஸ்கே

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.பி.எல். 2021 பருவம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 188 ஓட்டங்கள் அடித்தும், 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதன்பின் வீறுகொண்டு எழுந்த சி.எஸ்.கே. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளை வீழ்த்தி தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதன்பின் டெல்லி- ஆர்.சி.பி. இடையிலான போட்டியில் ஆர்.சி.பி. வெற்றி பெற, சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது இடத்திற்கு சறுக்கியது. நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக முதன்மையான கிளஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்துடன் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (+1.475) அசைக்க முடியாத அளவிற்கு உள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி-யின் ரன்ரேட் +0.089 ஆகும். 3-வது இடத்தில் இருக்கும் டெல்லி +0.269 ரன்ரேட் வைத்துள்ளது. மற்ற அணிகள் அனைத்து மைனஸில் ரன்ரேட் வைத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »