Press "Enter" to skip to content

பெங்களூர் அணி 6-வது வெற்றியை பெற ஆர்வம் – பஞ்சாப்புடன் இன்று மோதல்

தோல்வியில் இருந்து மீண்டு வர பஞ்சாப் அணி மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

அகமதாபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியில் தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் மட்டையாட்டம்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், ஜேமிசன் ஆகியோர் உள்ளனர். பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 4 போட்டியில் தோற்றது. அந்த அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், பூரன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

ஆனாலும் மட்டையாட்டம்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில் முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் உள்ளனர்.

தோல்வியில் இருந்து மீண்டு வர பஞ்சாப் அணி முயற்சிக்கும், அதற்கு மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »