Press "Enter" to skip to content

2வது தேர்வில் கருணரத்னே, திரிமானே சதம் – இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 469/6

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி சோதனை போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் 6 மட்டையிலக்குடுக்கு 469 ஓட்டங்கள் குவித்துள்ளது.

பல்லகெலே:

வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாடி வருகிறது. முதல் சோதனை டிராவில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் ஜெயித்து முதலில் மட்டையாட்டம் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கருணரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.
 
அணியின் ஸ்கோர் 209 ரன்னாக உயர்ந்த போது 12-வது சதத்தை அடித்து இருந்த கருணரத்னே (118 ரன், 190 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். திரிமன்னே 212 பந்துகளில் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 90 ஓவர்களில் ஒரு மட்டையிலக்குடுக்கு 291 ஓட்டங்கள் குவித்துள்ளது.

திரிமானே 131 ரன்னுடனும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சிறப்பாக ஆடிய திரிமானே 140 ஓட்டத்தில் அவுட்டானார். அரை சதமடித்து அசத்திய ஒஷாடா பெர்னாண்டோ 81 ஓட்டத்தில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ரன்னிலும், தனஞ்செய டி சில்வா 2 ரன்னிலும், பதும் நிசங்கா 30 ரன்னிலும்  வெளியேறினர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 469 ஓட்டங்கள் குவித்துள்ளது. டிக்வெலா 64 ரன்னுடனும்,  ரமேஷ் மெண்டிஸ் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அகமது 3 மட்டையிலக்குடும், மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், தஜுல் இஸ்லாம் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »