Press "Enter" to skip to content

தெறிக்க விட்ட ராயுடு… மும்பை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

டெல்லி மைதானத்தில் அதிரடியில் மிரட்டிய அம்பதி ராயுடு, பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார்.

புதுடெல்லி:

ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ்  வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது.

தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் சென்னை அணி, தனது இடத்தை தக்க வைக்கும் முனைப்பில் கவனமாக ஆடியது.

துவக்க வீரர் கெய்க்வாட், 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும், டூ பிளெசிஸ், மொயீன் அலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். டூ பிளெசிஸ் 50 ரன்களும், மொயீன் அலி 58 ரன்களும் குவித்தனர். ரெய்னா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

அதன்பின்னர் அம்பதி ராயுடு அதிரடியில் மிரட்டினார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நிறுவனம் கொடுக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை மும்பை பவுலர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 மட்டையிலக்குடுகளை இழந்து 218 ஓட்டங்கள் குவித்தது.

20 பந்துகளிலேயே விரைவாக அரை சதம் கடந்த அம்பதி ராயுடு, மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். ஜடேஜா 22 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ஓட்டங்கள் சேர்த்தார். 

இதையடுத்து, 219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »