Press "Enter" to skip to content

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் மலிங்கா இடம் பிடிப்பாரா?

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியை தேர்வு செய்யும் உறுப்பினர், மலிங்காவிடம் இருந்து இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்கிறார்கள்.

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சோதனை, ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இலங்கை அணிக்காக விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிறது. எல்லா நாடுகளும் டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதில் தயாராக உள்ளன. ஆனால் இலங்கை அணியில் மலிங்கா இடம் பெறுவாரா? என்பதை தேர்வாளர்கள் உறுதி செய்யமுடியாமல் இருக்கின்றனர்.

இதுகுறித்து இலங்கை அணி தேர்வு குழுவில் இடம் பிடித்துள்ளவர்களில் ஒருவரான பிரமோத்யா விக்ரமசிங்கே கூறுகையில் ‘‘மலிங்கா சிறந்த 20 கிரிக்கெட் வீரர், அவருடைய சேவை எப்போதுமே அணிக்கு முக்கியமானது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அனைத்து வீரர்கள் எங்களுக்கு ஒரே மாதிரிதான். தேர்வில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளைத்தான் பயன்படுத்துவோம்.

நான் மலிங்காவை தொடர்பு கொண்டு, இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நம்பிக்கை உள்ளதா? என்றார். அவர் என்னிடம், கடந்த ஒன்றிரண்டு ஆண்டாக போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவரிடம் நான், ஒரு வீரர் உள்நாட்டு தொடரில் விளையாடினால்தான் தேசிய அணித்தேர்வு தகுதியானவர் எனத் தெரிவித்தேன். மலிங்கா இதை நிறைவேற்றினால் அந்த நேரத்தில் அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

மலிங்கா எங்களுடைய தேர்வு கொள்கையை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதை அப்படியோ தொடருங்கள் என்றால். எனினும், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது அல்லது விளையாட விரும்பவில்லை என்பது குறித்து தெளிவாக பதில் அளிக்கவில்லை’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »