Press "Enter" to skip to content

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- செரீனா, மெட்வதேவ் 3வது சுற்றுக்கு தகுதி

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.

23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-வது வரிசையில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவை சேர்ந்த பூசன்நெசுவை எதிர்கொண்டார்.

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 3 முறை வென்ற செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் பூசன் நெசு 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-3, 5-7, 6-1.

மற்றொரு ஆட்டத்தில் 3-வது இடத்தில் உள்ள அர்யானா ‌ஷபலேன்கா (பெலாரஸ்) 7-5, 6-3 என்ற கணக்கில் சக நாட்டை சேர்ந்த சாஸ்லோவிச்சை தோற்கடித்தார்.

15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-வது இடத்தில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா), டோமிபவுலை (அமெரிக்கா) எதிர்கொண்டார். இதில் மெட்வதேவ் 3-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

5-ம் நிலை வீரரான சிட்சி பாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த பெட்ரோ மார்ட்டீனசை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 12-வது வரிசையில் உள்ள பஸ்டா (ஸ்பெயின்), இஸ்னெர் (அமெரிக்கா), பாக்னி (இத்தாலி), பாடிஸ்கா அகுக் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »